உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு லிட்டர் பாலில் தண்ணீரைக் கலந்து 81 மாணவர்களுக்கு வழங்கிய அவலம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 171 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த புதனன்று ஒரு லிட்டர் பாலில் தண்ணீரைக்கலந்து 81 மாணவர்களுக்கு பரிமாறியது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடு செய்து அதில் வெறும் ஒரு லிட்டர் பாலை மட்டும் கலந்து 81 குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசு கோடிக்கணக்கில் செலவிட்டு வருகிறது. ஆனால் குழந்தைகளுக்கு பால் வழங்கும் விவகாரத்தில் அரசு அஜாக்கிரதையாக இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே குழந்தைகளுக்கு மத்திய உணவிற்கு சப்பாத்திக்கு உப்பு வழங்கப்பட்டது. அதேபோல் சோற்றுக்கு மஞ்சள் கலந்த தண்ணீர் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.